செவ்வாய், 6 நவம்பர், 2012

வந்தாச்சு பெங்களூர் டு புதுச்சேரி புதிய இரயில் சேவை வாரம் மூன்று முறை


விழுப்புரம் , திருகோயிலூர் மற்றும் திருவண்ணாமலை பயணிகள் இனி பெங்களூர் செல்ல அடித்து பிடித்து பேருந்தில் கால் கடுக்க நின்று கொண்டெல்லாம் பயணம் செய்ய தேவை இல்லை. உங்களுக்காக புதிய இரயில் சேவை புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் , திருகோயிலூர், திருவண்ணாமலை, காட்பாடி , ஜோலார்பேட்டை , கிருஷ்ணராஜபுரம் , எஸ்வந்தபூர் வழியாக மும்பை வரை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இன்று(6 /11 /2012 )  முதல் தனது சேவையை புதுச்சேரியில் இருந்து தொடங்குகிறது 

புதுச்சேரியில் இருந்து ஞாயிறு , செய்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 8 .15  மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சுமார் 6  மனை அளவில் பெங்களூர் (  எஸ்வந்தபூர் ) சென்றடையும்.

மறுமார்கமாக பெங்களூர் (  எஸ்வந்தபூர் ) இல் இருந்து திங்கள் , செய்வாய் மற்றும் சனி கிழமைகளில் 8 .50  மணிக்கு புறப்பட்டு அதே வழியில் காலை 8 மணிக்கு புதுச்சேரி சென்றடயும்.
இது ஏற்கனவே இயங்கும் ஏழைகள் ரதம் போல் இல்லாமல் சாதாரண ரயில் சேவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக